கடலூர்: வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்து பத்தாம் வகுப்பு மாணவன் கிஷோர் மூளை சாவு அடைந்தான்.இதனால் மனமுடைந்த மாணவனின் தாயார் சிவகாமி தற்கொலை முயற்சி ஈடுபட்ட நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.