ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்; ராகுலுக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டும்: காங். செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்

சிம்லா: ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் ராகுல் காந்திக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், இமாச்சல் காங்கிரஸ் எம்எல்ஏவுமான குல்தீப் ரத்தோர், சிம்லாவில் அளித்த பேட்டியில், ‘ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் பிட்டு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சிலர் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குறித்து அவ்வப்போது மிரட்டல், அவதூறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

அதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரின் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு கவலை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ராகுலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் பிட்டு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சிலர் தங்கள் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Related posts

அமைதியான உறக்கமே ஆரோக்கியம்!

வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலருக்கு விருது வழங்க அரசாணை

கிருஷ்ணகிரி மாவட்டம் மொரணப்பள்ளி கிராமத்தில் ரூ.30 கோடியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி முன்னேற்றம்!!