இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க சிவகங்கையில் இருந்து ஆனந்தன் என்ற ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, கடந்த 2016ம் ஆண்டு முதல் 365 நாட்களும் விடுமுறையில்லாமல் மனுதாரர் பணியாற்றியுள்ளார். 365 நாட்களும் விடுமுறை இல்லாமல் யாரும் பணியாற்ற முடியாது என்பதால், அரசு விடுமுறை நாட்களிலாவது மனுதாரருக்கு விடுப்பு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்படுவதைப் போல இதுபோன்ற சிறப்பு பள்ளிகளிலும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.