மேலும், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரும், அர்ஜுனா விருது பெற்றவருமான செல்வி.ஆர்.வைஷாலி அவர்களுக்கு சர்வதேச போட்டிப் பயிற்சிக்கான செலவினத் தொகை ரூ.15,00,000/-க்கான காசோலை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். திருலோகச்சந்திரன், வருகின்ற 03.04.2024 அன்று உலகிலேயே உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திட தேவையான நிதி உதவித் தொகை ரூ.5,00,000/-க்கான காசோலை வழங்கினார்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொள்ள செல்வி.தி.ஆ.பிரியதர்ஷினி அவர்களுக்கு நுழைவுக் கட்டணம், இரயில் கட்டணம், மற்றும் சீருடைச் செலவினம் ஆகியவற்றுக்கான ரூ.55,000/-க்கான காசோலையினையும், திருச்சி மாவட்டத்தைச் தொகை சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரரான . ரா.ராஜேஷ் அவர்களுக்கு ரூ.12,00,000/- செலவினத்தில் செயற்கைக் கால்கள் அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation) நிதியில் இருந்து வழங்கப்பட்டது.