சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 32 கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 32 கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மண்டலத்தை சேர்ந்த 32 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு கலந்து கொள்கின்றனர். தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசாமி கோயிலில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்கிறார். இதேபோல் சென்னையில் உள்ள 32 கோயில்களில் அமைச்சர்கள், துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தலைவரை மாற்றுவதற்கான முனைப்பில் வேகம் காட்டி வரும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு