டெல்லி: செப்.18 முதல் 22ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.