இந்த நிலையில் குதிரை வளர்போரை ஒருங்கிணைத்து குதிரைகளின் நலனை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு கால்நடை நல வாரியம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் 129 குதிரைகள் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு குதிரையையும் அடையாளப்படுத்தும் விதமாக அதன் கழுத்தில் ஊசி மூலம் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. குதிரை சவாரி மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாக இருந்தாலும் அவற்றை வளர்ப்பது தான் தங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதாக குதிரை வளர்ப்போர் தெரிவிக்கின்றன.
இதில் மைக்ரோ சிப் பொருத்தி குதிரைகளின் உடல்நலத்தை பேணும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர்.சிறப்பு மருத்துவ முகாமுக்கு கொண்டு வராத குதிரைகளை கண்டுபிடித்து அவற்றிற்கு சிகிச்சை அளித்து மருத்துவ சிப் பொருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று குதிரைகளை பரிசோதிக்கவும் ஆண்டுக்கு 2 முறை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து காண்பிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.