திருப்பதியில் செப்டம்பர் மாதத்துக்கான சிறப்பு தரிசன இலவச டோக்கன் ஆன்லைனில் நாளை வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு கோயில் அருகே உள்ள சிறப்பு வாயில் வழியாக வரிசையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்படி, இவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன இலவச டோக்கன்கள் ஆன்லைனில் நாளை(23ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த டோக்கன் பெற்றவர்கள் தினமும் மதியம் 1 மணிக்கு வரிசையில் அனுமதிக்கப்பட்டு 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. எனவே, தேவைப்படும் பக்தர்கள் இந்த டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்