நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் காங்கிரஸ் எம்பிக்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், சசி தரூர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவது உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ. அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து