டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், சசி தரூர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவது உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ. அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.