சென்னை: தமிழ்நாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அரசு பதில் தெரிவித்துள்ளது. தேர்வு நடைமுறைகள் முடியும் வரை தற்காலிகமாக 36 ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.