நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதும், தூய்மை இந்தியா, பிரதமர் ஆவாஸ் யோஜனா போன்ற அரசின் அனைத்து முதன்மைத் திட்டங்களின் நிலையை அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் இணையதளத்தில் வெளியிடுவதும் சப்கி யோஜனா சப்கா விகாஸ் திட்டத்தின் நோக்கம். இதற்காக, ஐஐடி டெல்லியால் ஒருங்கிணைக்கப்பட்ட உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் 20,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்’’என்றனர்.