டெல்லி: சபாநாயகர் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். மக்களவை சபாநாயகர் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை. அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சபாநாயகர் தேர்வில் ஒத்துழைக்க தயார் என்று தெரிவித்தோம். துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.