Thursday, June 27, 2024
Home » சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து பேசியதாக தகவல்

சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து பேசியதாக தகவல்

by Lavanya

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவுவுடன் அதிமுக கொறடா சந்திப்பு நிகழ்துள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஒதுக்க வலியுறுத்திவரும் நிலையில் இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. அதிமுகவில் நிலவி வரக்கூடிய உள்கட்சி பூசலில் அதிமுக தரப்பில் இருந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்கின்ற பதவியை தங்களுடைய ஆதரவாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று பலமுறை அவர்கள் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தினால் இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்படாமல் இருந்ததாக சட்டப்பேரவை சபாநாயகர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. நேற்றைய தினம் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது. இந்நிலையில் தொடர்ந்து இந்த நிலையில் நேற்றைய தினம் இந்திய தேர்தல் ஆணையம் ஆனது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த நிலையில் துணை தலைவர் பதவியை தங்களுக்கு சாதகமானவருக்கு வழங்க வேண்டும் என்று சபாநாயகருடன் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அதில் ஒரு கோரிக்கையாக இருக்கை விவகாரத்தில் தங்களுக்கு சாதகமான ஆர்.பி.உதயகுமாருக்கு துணை தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தனர். சட்டப்பேரவையை பொறுத்தவரை எதிர்கட்சிக்கு துணை தலைவர் என்ற பதவி என்பது அதிகாரபூர்வமாக கிடையாது இருப்பினும் ஒரு மரபின் அடிப்படையிலே கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் கோரிக்கையின் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுக்கின்றார் என்பது எதிர்பார்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக தலைமையில் இருந்து பொதுச்செயலாளராக தங்களை அங்கீகரிக்க பட்டது தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சபாநாயகரை சந்தித்து ஆர்.பி.உதயகுமாருக்கு இந்த துணைத்தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தனர்.

You may also like

Leave a Comment

three + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi