ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் ஹபக் லாய்டு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி முதலீடு செய்வதால் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஹபக் லாய்டு நிறுவன முதன்மை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். சரக்கு முனையங்கள், சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் ஹபக் லாய்டு முன்னணி நிறுவனமாக உள்ளது. ரூ..2,500 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தளவாட வசதிகள் அமைத்திட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.