வயநாடு : மலைப்பகுதிகளில் கான்கிரீட் வீடுகள் அதிகளவில் கட்டப்படுவதே நிலச்சரிவு ஏற்படக்காரணம் என்று விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். நதிகளின் போக்கை தடுத்து வீடு, கட்டடங்கள் கட்டுவதால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது என்று செளமியா சாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர்.