பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதால் அவர்களை நீக்கி விட்டு புதிய ஒப்பந்த ஊழியர்கள் 60 நாட்கள் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் மீறியுள்ளது. எனவே, புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் உதவியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், மனுதாரர் சங்க உறுப்பினர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மறுநியமனம் வழங்கினால் அதன் மூலம் அவர்கள் எந்த உரிமையும் கோர முடியாது. இந்த இடைக்கால ஏற்பாடு இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. மனுவுக்கு ரயில்வே நிர்வாகம் பதில் தர உத்தரவிட்டு, விசாரணையை பிப்.3வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.