சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சுவடுகள் மறைவதற்குள், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த அதிகனமழை தென் தமிழக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. தென் மாவட்டத்தில் பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக 25,000 ரூபாய் வழங்கவும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழலில், கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டுகிறேன். தேவையான நிவாரண உதவிகளை வழங்க நான் தென் தமிழகத்திற்கு வருகிறேன்.
தென் மாவட்டங்களில் கனமழை நிவாரணமாக ரூ.25,000 வழங்க ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
previous post