சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை தாம்பரம், போரூரில் ஏற்றி இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் உள்ளதால் கோயம்பேட்டிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க கோரிக்கை வைத்த நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.