டெல்லி: தென் ஆப்பிரிக்கா, நமீபியா நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை பயணம் மேற்கொள்கிறார். தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து நமீபியாவுக்கு செல்லும் அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு துணை பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.