இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா காலத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததுபோல், ரயில்களின் எண்கள், பயணிகள் ரயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வரும் ஜூலை 1ம் தேதி முதல் புதிய எண்கள் நடைமுறைக்கு வருகின்றன. அந்த வகையில் நெல்லை- திருச்செந்தூர் ரயில் எண்.06409, வரும் 1ம் தேதி முதல் 56003 என மாற்றப்படுகிறது. திருச்செந்தூர்- நெல்லை ரயில் எண்.06674 வரும் 1ம் தேதி முதல் 56004 என மாற்றம் பெறுகிறது. நாகர்கோவில்- நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலின் எண்.56707 (பழைய எண்.06641) என மாற்றப்படுகிறது. நெல்லை- நாகர்கோவில் ரயிலின் எண்.56706 (பழைய எண்.06642) என மாற்றப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி- நெல்லை ரயில் எண்.56721 (பழைய எண்.06667), நெல்லை- தூத்துக்குடி ரயில் எண். 56722 (பழைய எண்.06668) என மாற்றம் பெறுகின்றன.
தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்லும் ரயிலின் எண்.56723(பழைய எண்.06671) எனவும், வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயிலின் எண்.56724( பழைய எண்.06672), திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரும் பயணிகள் ரயிலின் எண்கள்.56728, 56730, 56734 (பழைய எண்கள் முறையே 06405, 06676, 06678) எனவும். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில்களின் எண்கள் 56727, 56729, 56733 (பழைய எண்கள் முறையே 06673, 06675, 06677) மாற்றம் செய்யப்பட உள்ளன. கன்னியாகுமரி-புனலூர், செங்கோட்டை- மதுரை என தெற்கு ரயில்வே சுமார் 288 பயணிகள் ரயில்களின் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வரும் 1ம் தேதிக்கு பின்னர் எண்கள் மாற்றத்தை அறிந்து கொண்டு பயணிகள் ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.