அப்போது சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டாரா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை பசுமை இயக்கத்திற்காக பணியாற்றிவிட்டு வந்த சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார் என தெரிவித்தார். மேலும் சவுமியா அன்புமணி அவரது பேத்திக்கு திருமணம் முடித்த பின்பு தான் அரசியலுக்கு வந்திருப்பதாக அண்ணாமலை கூறினார். இவரது பேச்சை கேட்டு அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் சற்று குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து பேசிய அண்ணாமலை இட ஒதுக்கீடு முறையில் அரசியலுக்கு தான் வரவில்லை என்றும் இரண்டே இரண்டு தகர பெட்டிகளுடன் வந்ததாகவும் தெரிவித்தார்.