பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பேத்திக்கு திருமணம் முடிந்ததா?: அண்ணாமலை பேச்சைக்கேட்டு வானதி கொடுத்த ரியாக்ஷன் வைரல்

கோவை: கோவை தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலை தருமபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணி அவரது பேத்திக்கு திருமணம் முடித்த பின்பு தான் அரசியலுக்கு வந்திருப்பதாக கூறிய தவறான தகவலால் பாஜகவினர் கொழப்பமடைந்தனர். கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனித்தன்மை இல்லாமல் ஒரு குடும்பத்தை சேர்ந்த மகள், மகள் நிற்பது தான் வாரிசு அரசியல் என விளக்கமளித்தார்.

அப்போது சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டாரா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை பசுமை இயக்கத்திற்காக பணியாற்றிவிட்டு வந்த சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார் என தெரிவித்தார். மேலும் சவுமியா அன்புமணி அவரது பேத்திக்கு திருமணம் முடித்த பின்பு தான் அரசியலுக்கு வந்திருப்பதாக அண்ணாமலை கூறினார். இவரது பேச்சை கேட்டு அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் சற்று குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து பேசிய அண்ணாமலை இட ஒதுக்கீடு முறையில் அரசியலுக்கு தான் வரவில்லை என்றும் இரண்டே இரண்டு தகர பெட்டிகளுடன் வந்ததாகவும் தெரிவித்தார்.

 

Related posts

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்