தாயுடன் மீனவர் உல்லாசம் அடித்து கொன்ற மகன்கள்: தன்னுடன் தொடர்பை கைவிட்டதால் போட்டு கொடுத்த முதியவர்

தஞ்சாவூர்: தாயுடன் உல்லாசமாக இருந்த மீனவரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இதில், இறந்த வாலிபர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் ராஜா (36) என தெரியவந்தது. இதையடுத்து சரபேந்திரராஜன் பட்டினத்தை சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி(22), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீசார் கூறுகையில், மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த செல்வம் மனைவி அபூர்வம் (45).

2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்துவேறுபாடால் கணவனை பிரிந்து விட்டார். மூத்த மகன் விக்கி திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இளைய மகனான 17வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த குமார் (51), ராஜா (36) ஆகிய 2 பேரிடமும் அபூர்வத்துக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் குமாருடன் உள்ள தொடர்பை அபூர்வம் படிப்படியாக குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குமார், அபூர்வத்தின் மகன்களிடம் உனது அம்மாவுக்கும், ராஜாவுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ராஜாவை மாட்டி விட்டுள்ளார். இதனை அவர்கள் நம்ப மறுத்தனர். அபூர்வத்தின் வீட்டில் அவரும், ராஜாவும் உல்லாசமாக இருப்பதை அறிந்த குமார், விக்கியையும் மற்றும் அவரது தம்பியையும் அழைத்து சென்று காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், ராஜாவை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி பைக்கில் ஏற்றிச்சென்று கருவேலங்காட்டில் வீசியுள்ளனர் என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து குமார், விக்கி, அவரது 17வயதான தம்பி ஆகியோரை கைது செய்தனர்.

Related posts

இடைத்தேர்தலை புறக்கணித்து குற்றாலத்துக்கு கிளம்பிய குக்கர் பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

போலீஸ் கணவன் விஷம் குடித்து தற்கொலை கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு சாவு

வேலூர் அருகே வினோத திருவிழா சிறுமிகளுக்கு திருமணம் செய்து வழிபாடு: மலை கிராம பெண்கள் மட்டும் பங்கேற்பு, ஆண்கள் வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்