மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சி மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் அருண் (30). லாரி டிரைவர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு தர்ஷன் (6), நிஷாந்த் (4) என்ற 2 மகன்கள். நேற்று காலை லட்சுமி, இரு மகன்களை தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்துள்ளார். இதில் லட்சுமி மற்றும் நிஷாந்த் பலியாகினர்.

தர்ஷன் மட்டும் மோட்டார் தொங்கவிட்ட கயிற்றை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளான். சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் வந்து 3 மணி நேரம் உயிருக்கு போராடிய சிறுவன் தர்ஷனை மீட்டு, இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை