மதுரை: திருச்சி பொன் நகர், மாசி நகரில் திடக்கழிவு மேலாண்மையை முறையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் ஊரக மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குநர், திருச்சி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி பொன் நகர், மாசி நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹை-மாஸ் தெருவிளக்குகளை பராமரிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.