அப்போது, பேராவூர் என்னும் இடத்தில் எதிரே வந்த பொட்டகவயல் கிராமத்தை சேர்ந்த பாபு (30) என்பவரின் டூவீலர், பாலசுப்பிரமணியனின் டூவீலர் மீது மோதியது. இதில், ராணுவ வீரருக்கு தலையில் பலத்த காயமும், பாபுவிற்கு லேசான காயமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலசுப்பிரமணியன் இறந்தார். பாலசுப்பிரமணியனின் உடலுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.