மணமுடித்த ஒரு மாதத்தில் டூவீலர் விபத்தில் ராணுவ வீரர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சூரன்கோட்டை அருகே உள்ள பாப்பாக்குடியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் பாலசுப்ரமணியன் (26), ராணுவ வீரர். இவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆக.21ம் தேதி பாலசுப்பிரமணியனுக்கு சொந்த ஊரில் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தேவிப்பட்டினத்திற்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக டூவீலரில் சென்றார்.

அப்போது, பேராவூர் என்னும் இடத்தில் எதிரே வந்த பொட்டகவயல் கிராமத்தை சேர்ந்த பாபு (30) என்பவரின் டூவீலர், பாலசுப்பிரமணியனின் டூவீலர் மீது மோதியது. இதில், ராணுவ வீரருக்கு தலையில் பலத்த காயமும், பாபுவிற்கு லேசான காயமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலசுப்பிரமணியன் இறந்தார். பாலசுப்பிரமணியனின் உடலுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்