இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டைவிட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அனைவரும் வெளியே செல்ல முடிவு செய்தனர். ஆனால், அருண் தான் வரவில்லை என்றும், தான் ஓய்வெடுக்க விரும்புவதாகவும் கூறியதையடுத்து அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிலர் ஒன்றாக பல இடங்களுக்கும், கோயிலுக்கும் சென்றுவிட்டு இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினர்.
அப்போது, வீட்டின் உள்ளே இருந்த படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் அருண் சடலமாக கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி நாகலட்சுமி தனது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அருணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.