குளிர்பான வியாபாரிக்கு கொலை மிரட்டல்: திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த குளிர்பான கடை வியாபாரி இன்பராஜ் (49). இவர் நேற்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில், ‘திண்டுக்கல் நாகல் நகரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து கடந்த ஆக.21ம் தேதி நான் விலைக்கு வாங்கிவிட்டேன்.

இந்நிலையில் எனது கடையின் பூட்டை உடைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை தட்டி கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கடையை இடித்து தரைமட்டமாக்கி விடுவேன் என மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை