பிறந்த நாள் விழாவுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவி பலாத்காரம்: வாலிபர் மீது வழக்குப்பதிவு

குளச்சல்: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குலசேகரம் நல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் தங்கியிருந்து நர்சிங் படித்து வருகிறார். மாணவியின் உறவினர் பால்ராஜ், நெல்லை சீவலப்பேரி மடத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணமாகி குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் வசித்து வருகிறார். மகன் சிவகுமார் (25). மண்டைக்காட்டில் உள்ள அக்கா வீட்டில் தங்கி இருந்தபடி படகு கட்டும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிவகுமாருக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். கடந்த 2ம் தேதி அக்காவின் மகளுக்கு பிறந்தநாள் என்றும், கேக் வெட்டி கொண்டாட போவதால் நீயும் வா என்று மாணவியிடம் சிவகுமார் கூறியுள்ளார். உடனே அவரும் சிவகுமாரின் அக்கா வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது சிவகுமார், மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைந்தார். இதனை எதிர்பார்த்து காத்திருந்த சிவகுமார், மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கண்விழித்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை நினைத்து கதறி அழுதார்.

அவரை சமாதானப்படுத்திய சிவகுமார், ‘விரைவில் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறினாராம். இந்த சம்பவத்தை அறிந்த சிவகுமாரின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவியை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி, குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிவகுமார் மற்றும் அவரது தந்தை பால்ராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா