சமூக வலைதள வீடியோ பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர் சாவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32), டிராக்டர் டிரைவர். இவர் உமராபாத் அடுத்த மாச்சம்பட்டு அருகே விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடு ஏற்றி வர அடிக்கடி செல்வது வழக்கம். இதேபோல் நேற்று காலை தேங்காய் லோடு ஏற்றி வரச்சென்றார். அப்போது அங்குள்ள ஆற்றங்கரையோரம் இருந்த ஒரு வகை கிழங்கை பிடுங்கி எடுத்தவர், சமூக வலைதங்களில் இந்த கிழங்கு சம்பந்தமாக வீடியோ பார்த்ததாகவும், இதை சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு சத்துகள் கிடைக்கும் எனக்கூறி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மணிகண்டன் பேச முடியாமல் வாய் குளறி மயங்கி விழுந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வழியிலேயே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்