சென்னை: சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளின் படி தமிழ்நாட்டை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.184 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேசினார். சமூக நீதி பாதையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.