Thursday, September 19, 2024
Home » சமூக வலைத்தளங்கள் உஷார்

சமூக வலைத்தளங்கள் உஷார்

by Porselvi

ஒரு காலகட்டத்தில் மக்களை திரைப்படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அது மெல்ல மாற, தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்பொழுதெல்லாம் என்ன விவாதம் நடைபெறும் என்றால் திரைப்படம் பார்ப்பது நல்லதா கெட்டதா பிறகு டிவி பார்ப்பது நல்லதா கெட்டதா என ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருந்தது.அதேபோல் தற்போது சமூக வலைத் தளங்கள் மக்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. ஒரு வினாடிகூட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியே வர முடியாத நம்மில் பலர் இருக்கிறார்கள். பத்து நிமிடம் சமூக வலைத்தளம் ஏதாவது ஒன்று முடங்கிப் போய்விட்டால் உடனே அதுவே அந்த நேர ட்ரெண்டிங் செய்தியாக வெளியாகிறது.சினிமா, டிவி இந்த இரண்டிலும் நன்மையும் இருந்தது தீமையும் இருந்தது. அதை நாம் உணர்ந்தோம். ஆனால் இந்த சமூக வலைத்தளங்களிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. இதோ சில பொதுவான ஆலோசனைகளும், அலெர்ட்களும்.

நன்மைகள்

சமூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மை களையும் நல்கிக் கொண்டிருக்கிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. மேலும் பல சிறு, குறு வியாபாரிகளின் முதன்மை விற்பனை மையமே இந்த சமூக வலைத்தளங்கள்தான்.

உறவுகளுக்குப் பாலம்

தன் குடும்பத்தைப் பிரிந்து சென்று அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். அதுமட்டுமின்றி நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.

வணிக வளர்ச்சி

வணிக நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சமூக வலைத்தளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

கருத்துப் பரிமாற்றம்

பலர் வலைத்தளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைத்தளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள். இதனால் உலகை நிகழ்வுகள் கைகளுக்குள் அடங்குவது மட்டுமின்றி மற்றவர்களின் பார்வையும் நமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

தீமைகள்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலலிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 18 வயதுக்கு மேல் என்னும் விதிமுறைகளை கூடுமானவரை பெற்றோர்களும், குழந்தைகளும் கடைபிடித்து, வயது வந்தபின் சமூக வலைத்தளம் என கட்டுப்பாடுகளுடன் இருப்பது நல்லது.

ஏமாற்று வேலைகள்

அது மட்டுமின்றி இணையத் தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைத்தளங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். மேலும் சில ஆன்லைன் விற்பனைகள் போலியாக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கவும் பார்க்கிறார்கள்.

குற்றங்கள்

சமூக வலைத்தளங்களின் உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலிசாருக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.

அதிகபயன்பாட்டின் விளைவு

அலைபேசியில் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பார்கள். அதேபோல் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம். நல்ல விஷயங்களுக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோம்.
– கவிதாபாலாஜிகணேஷ்

 

You may also like

Leave a Comment

seven − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi