இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக பெய்துவரும் தொடர்மழை மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்து வரும் பனியால், மல்லிகைச் செடிகளில் உள்ள அரும்புகள் கருகி வருகின்றன. மேலும் செடியின் வளர்ச்சி குறைந்து, தளைவது முற்றிலும் நின்றுவிட்டது, இதனால் கடந்த மாதம் 10 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயி, தற்போது ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ மட்டுமே கொண்டு வரும் நிலை உள்ளது. நிலக்கோட்டை பகுதியில் சராசரியாக 5 டன் வரை மல்லிகைப் பூக்கள் விளைச்சல் கிடைக்கும். ஆனால், தற்போது ஒரு டன்னுக்கும் குறைவாகத்தான் விற்பனைக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து குறைவால், மல்லிகைப் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.200க்கு விற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ரூ.2 ஆயிரம் முதல் 2500 வரை விற்பனையாகி வருகிறது. இதனால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.