Monday, July 1, 2024
Home » ஸ்நேஹ் ராணா 8 விக்கெட் வீழ்த்தினார்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்ரிக்கா

ஸ்நேஹ் ராணா 8 விக்கெட் வீழ்த்தினார்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்ரிக்கா

by Ranjith

சென்னை: இந்திய மகளிர் அணியுடனான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு சுருண்ட தென் ஆப்ரிக்கா ஃபாலோ ஆன் பெற்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஷபாலி 205, மந்தனா 149, ஜெமிமா 55, கேப்டன் ஹர்மன்பிரீத் 69, ரிச்சா 86 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 2ம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது.

மரிஸன்னே காப் 69 ரன், நடின் டி கிளெர்க் 27 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். காப் 74 ரன் (141 பந்து, 8 பவுண்டரி), டி கிளெர்க் 39 ரன் எடுத்து வெளியேற, சக வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (84.3 ஓவர்). டுமி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா 17 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 25.3 ஓவரில் 4 மெய்டன் உள்பட 77 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தீப்தி ஷர்மா 2 விக்கெட் எடுத்தார். 337 ரன் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. போஷ் 9 ரன்னில் வெளியேற, கேப்டன் லாரா வுல்வார்ட் – சுனே லுவஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 190 ரன் சேர்த்தது. லுவஸ் 109 ரன் (203 பந்து, 18 பவுண்டரி) விளாசி ஹர்மன்பிரீத் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

3ம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்துள்ளது (85 ஓவர்). வுல்வார்ட் 93 ரன், மரிஸன்னே காப் 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 105 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

You may also like

Leave a Comment

8 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi