இளம் பெண்ணிடம் செயின் பறித்தவர் கைது

 

திருச்சி, ஜூலை 28: திருச்சியில் இளம்பெண்ணிடம் செயின் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பரமசிவம் தெருவைச் சேர்ந்தவர் விவேக்குமார். இவரது மனைவி சிவரஞ்சனி (24). சம்பவத்தன்று இவர் தனது மகனை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு தின்பண்டங்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர் ஒருவர் சிவரஞ்சனி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க தாலிச்செயினை பறித்து சென்றார். இதுகுறித்து சிவரஞ்சனி பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிந்த போலீசார் விசாரணையில், மேலகல்கண்டார்கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்த சுதாகர் (45) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து ஒன்றரை பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்