பாம்பு கடித்து இறந்த வாலிபர் இறுதி சடங்கில் பாம்பை எரித்த கிராம மக்கள்

கோர்பா: சட்டீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று இரவு திகேஷ்வர் ரதியா(22) என்ற வாலிபர் வீட்டின் படுக்கையறையில் இருந்தபோது பாம்பு கடித்தது. இதனால் அலறி துடித்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை அவர் உயிரிழந்தார். இதனிடையே வீட்டில் இருந்த பாம்பை அக்கம்பக்கத்தினர் பிடித்து கூடையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து திகேஷ்வரின் இறுதி ஊர்வலம் வீட்டில் இருந்து தொடங்கி இடுகாட்டுக்கு சென்றது. அப்போது அவரது உறவினர்கள் அந்த பாம்பை கயிற்றில் கட்டி இழுத்து சென்றனர். திகேஷ்வர் இறுதி சடங்கின்போது பாம்பையும் தீயிட்டு எரித்தனர்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது