ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அதில் ஒரு பாம்பு பதுங்கியிருப்பது தெரிந்ததால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். உடனே பாம்புபிடி வீரரை அழைத்துள்ளார். அவர் விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் குச்சியால் காலணியை தொட்டதும், அதில் பதுங்கியிருந்த பாம்பு சீறியபடி வெளியே வந்தது. அது படமெடுத்தபடி நிற்கும் காட்சி பார்ப்பவர்களை மிரள வைத்தது. அந்த பாம்பை நீரஜ், லாவகமாக பிடித்ததுடன், அதுகுறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப பட்டனை அழுத்தி உள்ளனர்.