சென்னை: ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது; தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி சீரமைக்கப்பட்டு மாலைக்குள் மின்விநியோகம் சீராகும். அதிக மின்னழுத்தம் காரணமாகவே பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.