அதில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019ல் திருத்தம் செய்து 300 சதுர மீட்டர் பரப்பளவில், 14 மீட்டருக்கு மிகாமல் கட்டப்பட்ட வணிகக் கட்டடங்களுக்கு பணிநிறைவுச் சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தம் செய்வதற்கு முன் சிறு வணிக உரிமையாளர்கள் தண்ணீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்புகளைப் பெறுவதற்கு பணிநிறைவுச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. இந்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில், மாநிலம் முழுவதும் 750 சதுர மீட்டருக்கும் குறைவான 8 குடியிருப்பு அலகுகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு பணிநிறைவுச் சான்றிதழ் பெறும் விதிமுறைகளைத் நகர்ப்புற வீட்டுவசதித்துறை சார்பில் தளர்த்தப்பட்டன. தற்போது ‘‘சிறிய வணிகர்கள் பயன்பெறும் வகையில், 300 சதுர மீட்டருக்கும் குறைவான, 14 மீட்டர் உயரமுள்ள வணிக கட்டடங்களுக்கு பணிநிறைவு சான்றிதழில் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது’’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.