குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்

* அதிரசம் செய்யும் போது, ஈர அரிசிமாவை மட்டுமே உபயோகிக்க வேண்டும். மாவு உலர்ந்திருந்தால் அதிரசம் சரியாக வராது. அதேபோல பாகு காய்ச்ச பாகு வெல்லத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* கறிவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் நான்கைந்து நாட்களானாலும் வாடாது.
* ரசம் கொதித்த பிறகு அரை டம்ளர் முதல் ஒரு டம்ளர் வரை கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து அடுப்பை அணையுங்கள். பிறகு வழக்கமான தாளிப்பை சேருங்கள். ரசம் ருசிக்கும்.
* பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்குவதற்குள் ஒரு வழியாகிவிடும். பீட்ரூட்டை முழுவதுமாகவே அல்லது பாதி நறுக்கியோ வேகவைத்த பிறகு தோலை உரித்துவிட்டு நமக்கு வேண்டிய அளவில் நறுக்கினால் சுலபமாக நறுக்கவரும். நேரமும் மிச்சமாகும்.
* தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு எடுக்க வரவில்லையா? தோசைக்கல் முழுவதும் படியும் படிகல் உப்பை பரவலாகத் தூவி, ஐந்து நிமிடங்களுக்கு பிறகு உப்பை எடுத்து விட்டு தோசை ஊற்றுங்கள். உடையாமல் வட்டமாக எடுக்க வரும்.
* அடை, தோசைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்புடன் இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.
* இரவு சாதம் மீந்து விட்டால் மறு நாள் சிறிது பாசிப்பருப்பை வேகவைத்து, சாதத்தோடு சேர்த்து கிளறி சிறிது வெந்நீரில் வேகவிடவும். நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு, இஞ்சி, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்து போட்டு கிளறினால் கமகம மிளகு பொங்கல் தயார். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும். சுவையாக இருக்கும்.
* வெந்தயக்குழம்பு கொதிக்கும்போது சுட்ட உளுந்து அப்பளத்தை நறுக்கிப் போட்டால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* கொத்தமல்லித் தழையை வாழைஇலையில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஐந்து நாட்கள்வரை பசுமையாக இருக்கும்.
* இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் தண்ணீர் ஊற்றி அரைத்தால் மாவு நன்றாக பொங்கிவரும்.
* காய்ந்த மிளகாயை வறுக்கும் போது நெடி வராமல் இருக்க சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் போதும்.
* உளுந்து வடை செய்யும்போது அரைத்து எடுத்த மாவில் ஒரு பிடி கோதுமைமாவு சேர்த்து பிசைந்து செய்தால் வடை ருசியாக இருக்கும். எண்ணெய் குறைவாகவே செலவாகும்.
– அ.ப.ஜெயபால்

 

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்