Sunday, July 7, 2024
Home » குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

by Porselvi

* நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிது வெண்ணெயைக் கலந்து வைத்தால் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
* பலகாரம் செய்யும் எண்ணெயில் இரண்டு மூன்று கொய்யா இலைகளை போட்டு விட்டால் எண்ணெய் பொங்கி வழியாது.
* பலகாரங்கள் செய்யும்போது எண்ணெய்க் கறை உடையில் பட்டு விட்டால் அந்த இடத்தில் கோதுமை மாவைத் தேய்த்து தண்ணீரில் அலசி எடுத்தால் போதும். எண்ணெய்க் கறை நீங்கிவிடும்.
* ஏலக்காய்த் தோலை டீத்தூளில் போட்டு வைத்தால் டீ ஏலக்காய் மணத்துடன் சூப்பராக இருக்கும்.
* காபிப்பொடியை காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி, ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் நீண்ட நாட்களுக்கு மணம் அப்படியே இருக்கும்.
* விருந்தினர்கள் நண்பர்களுக்கு காபி, டீயில் சர்க்கரை போடாமல், சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் அல்லது மரக் கலக்கி வைத்துவிடுங்கள். ஏனெனில் யாருக்கு என்ன உடல் பிரச்னை இருக்கிறது என்பது இப்போதெல்லாம் தெரிவதில்லை.
* டீத்தூளை சிறிது நேரம் வெயிலில் உலர வைத்து, பிறகு டீ போட்டு சாப்பிட்டால் டீ மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
* பயன்படுத்தப் பட்ட டீ. காபி தூளை செடிகளுக்கு போட்டால் நல்ல உரமாகும்.
* ஏலக்காயை பொடி செய்தால் எளிதில் பொடியாகாது. இதைத் தவிர்க்க ஏலக்காயுடன் சிறிது சீனி சேர்த்துப் பொடித்தால் எளிதில் பவுடர் போல் ஆகிவிடும்.
* எந்தவித பலகாரம் செய்தாலும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி பிசைந்து பலகாரம் செய்து எண்ணெயில் போட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
* சாறு எடுத்தவுடன் திராட்சைச் சக்கையை கொண்டு பழக்கூழ் தயாரிக்கலாம்.
* டீ போட்டவுடன் டீத்தூளை உலர்த்தி அதில் புகை போட்டால் ஈ, கொசுத்தொல்லை இருக்காது.
* சூடான டீ காபியை உடனே கண்ணாடி டம்ளரில் ஊற்றிவிட வேண்டாம். டம்ளரில் ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு பிறகு சூடானவற்றை ஊற்றினாலும் டம்ளர் உடையாது.
* தேநீரை ஊற்றுவதற்கு முன்பு டம்ளரில் ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலைப் போட்டு, டீயை ஊற்றி, சிறிது நேரத்தில் தோலை எடுத்துவிட்டால் டீ மணமுடனும் ருசியுடனும் இருக்கும்.
– எம். ஏ. நிவேதா

You may also like

Leave a Comment

nineteen + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi