குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்!!

* கிழங்கு வகைகளை சமைக்கும்போது அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம் கலவையில் கிழங்குகளை புரட்டி எடுத்து பின் வதக்கினால் காரம், மணம் சூப்பராய் இருக்கும்.
* கேரட், பீட்ரூட்டை துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கண் கவரும் சத்தான கலர்புல் தோசை தயார்.
* புதினா, தக்காளி இரண்டையும் வைத்து பஜ்ஜி மாவில் கலந்து கலர்ஃபுல் பஜ்ஜிகள் செய்யலாம்.
* தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய்ப் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.
* ரசத்திற்கு புளி கரைக்கும் போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும். வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை ஃப்பிரிட்ஜில் வைக்கக்கூடாது.
* கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை பழச்சாறு கலந்து நீரில் முக்கிவைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.
* கீரை சமைக்கும்போது மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் சிறிது நேரம் மூடிவைத்து விட்டு சமைத்தால், கீரையின் நிறம் மாறாது. ரசாயன பாதிப்பும் இருக்காது.
* மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் சிறிது கடுகு எண்ணெய்யும் சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது கத்தரிக்காயை தனியாக நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் மணம் அற்புதமாக இருக்கும்.
* குளிர்பானங்கள், ஜூஸ்வகைகள், எனர்ஜி பானங்கள், மில்க் ஷேக் போன்றவற்றை குறைக்க வேண்டும்.
* இனிப்புகளில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
– அ.ப.ஜெயபால்

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை