*செம்புப் பாத்திரங்களை எலுமிச்சைத் தோல்களை வைத்து துலக்கினால் பாத்திரங்கள் புதிது போல் பளிச்சிடும்.
* சுண்ணாம்பும் உப்பும் சம அளவு கலந்த நீரில் முட்டையை நன்றாக அமுக்கி எடுத்து வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
* சமையலில் காரம் அதிகமாகி விட்டால் அதில் சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கி விட்டால் காரம் குறைந்து விடும்.
* பாலில் எவ்வளவு குறைவாக தயிர் ஊற்றுகிறோமோ அந்தளவிற்கு கெட்டித் தயிர் கிடைக்கும்.
v உறை ஊற்றும் பாலில் தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது. அப்படி தண்ணீர் அதிகமாக இருந்தால் லோசான தீயில் பாலை வைத்து வற்றச்செய்ய வேண்டும்.
* பசுவின் பாலை விட எருமையின் பாலில்தான் அதிக கெட்டியான தயிர் கிடைக்கும்.
* உறை ஊற்றும் பாத்திரத்தை தினமும் சுடுநீரில் கழுவி, வெயிலில் காயவைத்து துடைத்துப் பயன்படுத்த வேண்டும்.
* தேங்காய்ச் சட்னி செய்யும்போது புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு கலந்தால் சுவை கூடும்.
* கீரையை சமையல் செய்யும்போது ஒரு தேக் கரண்டி சர்க்கரை கலந்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
* ஏலக்காயைப் பொடிக்கும்போது இரண்டு மூன்று அரிசியையும் சேர்த்து பொடித்தால் ஒட்டாமல் பொடியாகும்.
* கத்தரிக்காய்க் காம்புகளை தூர எறியாமல் சாம்பாரோ, ரசமோ கொதித்து வரும் போது போட்டால் சுவை அள்ளும்.
* சிறிது சுக்குப் பொடியை புளியோதரையில் கலந்து வைத்தால் இரண்டு நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
* வடகத்துடன் மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால் பூச்சி, வண்டுகள் அண்டாது.
* குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் தக்காளிப் பழத்தை இரண்டாக நறுக்கிப் போட்டால் அதிகப்படியான உப்பு சரியாகிவிடும்.
– எம். ஏ. நிவேதா