டெல்லி: பெரும் தொழிலதிபர்களுக்கு சலுகை வழங்கும் மோடி அரசு சிறு தொழிலதிபர்களை அவமதிக்கிறது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி எப்படி ஆணவத்துடன் நடக்கிறாரோ அதைபோல் நிர்மலா சீதாராமன் ஆணவத்தோடு நடப்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக தொழிலதிபர் சீனிவாசனை மிரட்டி அவமதித்துள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.