இதன் தொடர்ச்சியாக சிவான் மாவட்டம் தரவுண்டா தொகுதியின் படேதா கிராமத்தையும், மகாராஜ்கஞ்ச் தொகுதியின் கரோலி கிராமத்தையும் இணைக்கும் விதமாக ராம்கர் ஆற்றின் மீது சிறிய பாலம் கட்டப்பட்டிருந்தது. 30 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றும் ஒரு பால விபத்து அரங்கேறி உள்ளது.
கிழக்கு பூர்வி சம்பாரன் மாவட்டம் மோதிஹாரியின் கோரசஹான் பேரவை தொகுதியில் உள்ள அம்பா கிராமத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் விதமாக கால்வாய் மீது 16 மீட்டர் நீளமுள்ள பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. மாநில ஊரக பணித்துறையால் ரூ.1.5 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த சிறிய பாலம் முழுவதும் நேற்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து மாநில ஊரக பணித்துறை தலைமை செயலாளர் தீபக் சிங் கூறியதாவது, “சம்பவ இடத்தில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். ஒரேவாரத்தில் 3வதாக நடந்துள்ள பால விபத்து ஆளும் மாநில அரசு மேற்கொள்ளும் பொதுப்பணிகளின் தரம் குறித்து சந்தேகத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது.