சென்னை: முதல்வர் உள்ளிட்டோர் பற்றி அவதூறாக பேசியதாக தொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் அளித்தது. 15 நாட்களுக்கு செல்லபாண்டியன் விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் உத்தரவாதம் அளித்தார்.