விருதுநகர்: சிவகாசி அருகே திருத்தங்கல் காவல் நிலையம் அருகே லாரி டிரான்ஸ்போர்ட் குடோனில் பட்டாசுகள் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.