சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள கனிஸ்கர் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்

விருதுநகர்: சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள ரெங்கபாளையம் கனிஸ்கர் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்திருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் பொன்னுத்தாய், சின்னதாய் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த ஆலையின் அறைக்குள் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. தயாரித்த பட்டாசுகளை வெடித்துப் பார்த்து சோதனை நடத்திய போது அருகில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. கடையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு