விருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.