மதுரை: சிவகங்கை மாவட்டம் தெக்கூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. கோயில் இடத்தில் கற்களை அகற்றிய விவகாரத்தில் பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் நிர்வாகி தணிகாச்சலம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.