Thursday, October 3, 2024
Home » சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

by Suresh

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 4 மாதங்களாக கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் வேலாயுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே மதகுபட்டியில் தனியார் நகை அடகு கடை உள்ளது. மதகுபட்டியை சேர்ந்த பாண்டித்துரை உள்பட 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போடப்பட்டிருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து பாண்டித்துரைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவர் வந்து பார்த்தபோது கடையின் இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளையையை அடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 4 மாதங்களாக கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் வேலாயுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

four + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi